சாவிலும் இணைபிரியாத தம்பதி


சாவிலும் இணைபிரியாத தம்பதி
x
தினத்தந்தி 15 Nov 2022 8:30 PM GMT (Updated: 15 Nov 2022 8:48 PM GMT)

விருதுநகர் அருகே சாவிலும் இணை பிரியாமல் அடுத்தடுத்து இறந்தனர்.

விருதுநகர்


விருதுநகர் அருகே சாவிலும் இணை பிரியாமல் அடுத்தடுத்து இறந்தனர்.

உடல்நலக்குறைவு

விருதுநகர் அருகே உள்ள பெரிய வாடியூரை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 80). விவசாயியான இவரது மனைவி கருப்பாயி அம்மாள் (73). இவர்களுக்கு 2 மகன்களும், 5 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மூத்த மகன் யோகராஜ் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

கடைசி மகள் நாகேஸ்வரி மட்டும் சுப்பிரமணியத்தின் வீட்டு அருகில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் தன் தாய், தந்தையரை கவனித்து வந்தார். இந்நிலையில் கருப்பாயி அம்மாளுக்கு கடந்த 15 நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மனவேதனையடைந்த நிலையில் சுப்பிரமணியம் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

தம்பதி அடுத்தடுத்து சாவு

இந்தநிலையில் அவருக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று மதியம் அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். அவரது உடலை, யோகராஜ் வீட்டுக்கு கொண்டு வந்தார். அனைவரும் வேதனையில் இருந்த நேரத்தில் திடீரென கருப்பாயி அம்மாளும் மயங்கி விழுந்தார். இந்தநிலையில் இரவு 7 மணிக்கு அவரது உயிரும் பிரிந்தது.

கணவர் இறந்த வேதனையை தாங்க முடியாத கருப்பாயி அம்மாளும் இறந்தது அவரது உறவினர்களுக்கும், கிராம மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தம்பதியினர் சாவிலும் இணைபிரியாமல் மரணம் அடைந்தது பெரிய வாடியூர் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.


Related Tags :
Next Story