குஜிலியம்பாறை, பாளையம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்


குஜிலியம்பாறை, பாளையம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x

PowerCut

திண்டுக்கல்

பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி பாளையம், தி.கூடலூர், குஜிலியம்பாறை வடக்கு, ஆனைப்பட்டி, வான்ராயன்பட்டி, அணியாப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இதேபோல் வள்ளிபட்டி, சத்திரப்பட்டி மற்றும் சின்னுலுப்பை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி அம்மாபட்டி, ராமகிரி, மல்லபுரம், குஜிலியம்பாறை, இலுப்பபட்டி, புளியம்பட்டி, சி.சி.சி.குவாரி, உக்குவார்பட்டி, வாணிக்கரை, கூம்பூர், பள்ளப்பட்டி, அழகாபுரி, சத்திரப்பட்டி, சேர்வைகாரன்பட்டி, கரிக்காலி, பல்லாநத்தம், தாதாநாயக்கனூர், இடையபட்டி, காளப்பட்டி, பூசாரிபட்டி, திருமக்கம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவலை குஜிலியம்பாறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பிச்சை தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story