உல்லாசமாக இருக்க வாலிபர்கள்.. செல்போனில் வாடிக்கையாளர்களை அழைத்து விபசாரத்தில் ஈடுபட்ட நபர்


உல்லாசமாக இருக்க வாலிபர்கள்.. செல்போனில் வாடிக்கையாளர்களை அழைத்து விபசாரத்தில் ஈடுபட்ட நபர்
x

செல்போன் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு விபசார தொழில் செய்து வந்தது தெரியவந்தது.

பெங்களூரு,

பெங்களூருவில் செல்போன் மூலம் வாடிக்கையாளர்களை அழைத்து விபசாரம் செய்து வருவதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவருக்கு செல்போன் அழைப்பு வந்தது. அப்போது எதிர்முனையில் பேசிய நபர், உல்லாசமாக இருக்க வாலிபர்கள் தங்களிடம் இருப்பதாகவும், வேண்டும் என்றால் முன்பதிவு செய்து பயன்பெற்று கொள்ளுமாறும் கூறினார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண், பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஆனந்த் சர்மா என்ற நபரை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் அவர் செல்போன் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு விபசார தொழில் செய்து வந்தது தெரியவந்தது.

மேலும் கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகளிடம் ஆசை வார்த்தைகள் கூறி விபசாரத்தில் ஈடுபடுத்தியதும் தெரிந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து போலீசார் செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


Next Story