தொழிலாளியை கத்தியால் குத்தி செல்போன், பணம் கொள்ளை


தொழிலாளியை கத்தியால் குத்தி   செல்போன், பணம் கொள்ளை
x
தினத்தந்தி 15 Sep 2022 6:45 PM GMT (Updated: 15 Sep 2022 6:45 PM GMT)

தொழிலாளியை கத்தியால் குத்தி செல்போன், பணம் கொள்ளையடித்த சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு: பெங்களூரு பனிசந்திரா பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 23), தச்சு தொழிலாளி. நேற்று இரவு அவர், சம்பிகேஹள்ளி ஆர்.பி.ரோட்டில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள், ரஞ்சித்திடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கொடுக்கும்படி கேட்டனர்.

அவர் கொடுக்க மறுத்து விட்டதால், ஆத்திரமடைந்த மர்மநபா்கள் ரஞ்சித்தை கத்தியால் குத்திவிட்டு, அவரிடம் இருந்த செல்போன், பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். காயம் அடைந்த ரஞ்சித் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சம்பிகேஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story