கிராமிய பாடகி கடத்தி பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்


கிராமிய பாடகி கடத்தி பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்
x

கிராமிய பாடகி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தா மாவட்டம் தக்‌ஷிந்தரி பகுதியை சேர்ந்த கிராமிய பாடகி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிராமிய பாடகி கடந்த 12-ம் தேதி நண்பகல் தனது வீட்டிற்கு அருகே உள்ள கடைக்கு பொருள் வாங்க சென்றுள்ளார். அப்போது, திடீரென மழை பெய்ததால் அருகில் உள்ள ஒரு ஓலைகொட்டகைக்குள் ஒதுங்கி நின்றுள்ளார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த ரிக்‌ஷா டிரைவர் அந்த பெண்ணை அருகில் இருந்த மறைவான பகுதிக்கு இழுத்து சென்றுள்ளான். அங்கு அந்த பெண்ணை ரிக்‌ஷா டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். பின்னர், அந்த பாடகி அணிந்திருந்த தங்க நகைகள், பணத்தையும் பறித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினான்.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான கிராமிய பாடகி 2 நாட்களாக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். பின்னர், உடல் நலம் சற்று முன்னேறிய பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நடந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கிராமிய பாடகியை பாலியல் வன்கொடுமை செய்த ரிக்‌ஷா டிரைவரை நேற்று கைது செய்தனர். மருத்துவபரிசோதனையில் கிராமிய பாடகி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story