ஜம்மு-காஷ்மீர் 2ம் கட்ட தேர்தல்: விறுவிறு வாக்குப்பதிவு
ஜம்மு-காஷ்மீரில் இன்று 2ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஸ்ரீநகர்,
Live Updates
- 25 Sep 2024 6:16 AM GMT
காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்
ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 24.10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
- 25 Sep 2024 5:30 AM GMT
தேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக் அப்துல்லாவும் அவரது மகனும் கட்சியின் துணை தலைவருமான உமர் அப்துல்லாவும் ஸ்ரீநகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.
- 25 Sep 2024 5:26 AM GMT
ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புட்காம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியை வெளிநாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டனர்.
- 25 Sep 2024 5:19 AM GMT
ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு கட்சி துணைத் தலைவர் உமர் அப்துல்லா கந்தர்பால் மற்றும் புட்காம் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறார். அவர் 2-வது கட்ட வாக்குப்பதிவு குறித்து கூறும்போது "நாம் இந்த தேர்தலுக்காக 10 வருடம் காத்திருந்தோம். முதல் கட்ட தேர்தல் நல்ல முறையில் நடந்து முடிந்தது. 2-வது கட்ட தேர்தலிலும் அதிக வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கிறோம். இந்த பங்கேற்பு இந்திய அரசாங்கத்தால் அல்ல, இந்திய அரசாங்கம் செய்த அனைத்தையும் மீறி. மக்களை அவமானப்படுத்தியிருக்கிறார்கள், மக்களைத் தடுத்து நிறுத்தி துன்புறுத்துவதற்கு அரசாங்கத்தின் அனைத்து எந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. எல்லா தேர்தல் நாட்களும் முக்கியமானவை. இந்த தேர்தலில் எனக்கு தனிப்பட்ட பங்கு உள்ளது ஆனால் எல்லா கட்டங்களும் முக்கியமானவை” என உமர் அப்துல்லா தெரிவித்தார்.
- 25 Sep 2024 4:56 AM GMT
காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்
ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது
- 25 Sep 2024 4:51 AM GMT
பாரா ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் வெண்கல பதக்கம் வனெ்ற ராகேஷ் குமார் கட்ராவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.
- 25 Sep 2024 4:45 AM GMT
பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் பிங்க் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடியில் அதிகாரிகள் அனைவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தனித்துவமான வாக்குச்சாவடியானது வரவேற்பு சூழலை உருவாக்குவதையும், தேர்தல் செயல்பாட்டில் பெண்களின் அதிக பங்களிப்பை ஊக்குவிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
- 25 Sep 2024 3:52 AM GMT
"ஜம்மு காஷ்மீர் சகோதர சகோதரிகளே, இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது, அதிக எண்ணிக்கையில் வந்து உங்கள் உரிமைகள், செழிப்பு மற்றும் செழிப்புக்காக வாக்களியுங்கள் - இந்தியாவுக்கு வாக்களியுங்கள். உங்கள் மாநில அந்தஸ்தை பறித்ததன் மூலம், பாஜக அரசு உங்களை அவமதித்து, உங்கள் அரசியலமைப்பு உரிமைகளுடன் விளையாடியுள்ளது. இந்தியாவுக்கான உங்கள் ஒவ்வொரு வாக்கும் பாஜகவால் உருவாக்கப்பட்ட இந்த அநீதியின் தீய வட்டத்தை உடைத்து ஜம்மு காஷ்மீரை வளமான பாதையில் கொண்டு வரும்" என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
- 25 Sep 2024 3:19 AM GMT
ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில்,
"ஜம்மு-காஷ்மீர் இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்களிக்கப் போகும் அனைத்து வாக்காளர்களும் பயங்கரவாதம் இல்லாத மற்றும் வளர்ந்த ஜம்மு-காஷ்மீரை உருவாக்க அதிகபட்ச அளவில் திரண்டு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களின் பொன்னான எதிர்காலத்திற்காகவும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காகவும், இந்த இடத்தின் வளர்ச்சிக்காகவும் அர்ப்பணிப்புடன் செயல்படும் ஒரு அரசாங்கத்திற்கு வாக்குகளை பதிவு செய்யுங்கள். ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், ஜம்மு-காஷ்மீரை பயங்கரவாதம், உறவினர் மற்றும் ஊழலில் இருந்து விடுவிக்கவும் இன்றே வாக்களியுங்கள்." என்று தெரிவித்துள்ளார்.
- 25 Sep 2024 3:08 AM GMT
ஜம்மு காஷ்மீர் ரைசியில் உள்ள வாக்குச்சாவடியில் 102 வயதான ஹாகி கரம் தின் பட் என்பவர் வாக்களித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நல்ல அரசு அமைந்தால் பல பணிகள் நடக்கும். இளைஞர்களுக்கு நல்ல கல்வி, தொழில்கள் அமைய வேண்டும் என்பதால் அனைவரும் வந்து வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.