டெல்லியில் லேசான நிலஅதிர்வு - பொதுமக்கள் அதிர்ச்சி


டெல்லியில் லேசான நிலஅதிர்வு - பொதுமக்கள் அதிர்ச்சி
x

நிலஅதிர்வால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் இன்று மாலை நிலஅதிர்வு உணரப்பட்டது. இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று மாலை 4.16 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன.

இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் தலைநகர் டெல்லியில் உணரப்பட்டது. நிலஅதிர்வால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். முன்னதாக, கடந்த 3ம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 157 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story