பிறந்தநாள் கொண்டாட சொந்த ஊருக்கு சென்ற கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்


பிறந்தநாள் கொண்டாட சொந்த ஊருக்கு சென்ற கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்
x

பெங்களூருவில் உள்ள கல்லூரியில் மாணவி பி.காம் படித்து வந்தார்.

பெங்களூரு,

கர்நாடகம் மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் ஒன்னஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரக்ஷிதா (வயது 16). இவர் பெங்களூருவில் உள்ள கல்லூரியில் விடுதியில் தங்கியிருந்து பி.காம் படித்து வந்தார். நேற்று ரக்ஷிதாவுக்கு பிறந்தநாள் ஆகும். இதனால் அவர் தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாட சொந்த ஊருக்கு பெங்களூருவில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

அவர் சென்ற கார் சிக்பள்ளாப்பூர் அருகே நந்திகிராமம் பகுதியில் சென்ற போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரக்ஷிதா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் கார் டிரைவர் பலத்த காயம் அடைந்தார். அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து தொடர்பாக நந்திகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story