நாட்டில் இதுவரை 195 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது - சுகாதாரத்துறை தகவல்


நாட்டில் இதுவரை 195 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது - சுகாதாரத்துறை தகவல்
x

கோப்புப்படம்

இந்தியாவில் 195 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கியது. இதில், முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதன்பின், கடந்த ஆண்டு ஜூனில் இருந்து நாடு முழுவதும் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், இந்தியாவில் மொத்தம் 195 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

18-59 வயதுடையவர்களில், 1,36,969 முன்னெச்சரிக்கை மருந்துகள் நேற்று இரவு 7 மணி வரை வழங்கப்பட்டன. சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, இந்த வயதினருக்கு இதுவரை 32,97,046 முன்னெச்சரிக்கை மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. 12-14 வயதுக்குட்பட்ட 3.51 கோடி குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் கொடுக்கப்பட்டுள்ளது, அதே சமயம் 15-18 வயதுக்குட்பட்ட 5.98 கோடி இளம் பருவத்தினருக்கு முதல் டோஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Next Story