கோவிலில் திருடிய பொருட்களை மன்னிப்பு கடிதத்துடன் திருப்பி ஒப்படைத்த வினோதம்


கோவிலில் திருடிய பொருட்களை மன்னிப்பு கடிதத்துடன் திருப்பி ஒப்படைத்த வினோதம்
x

மத்திய பிரதேசத்தில் கோவிலில் விலையுயர்ந்த பொருட்களை திருடியவர் மன்னிப்பு கடிதத்துடன் அவற்றை திருப்பி ஒப்படைத்த வினோதம் நடந்துள்ளது.



பாலகாட்,


மத்திய பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தில் ஷாந்திநாத் திகம்பர் ஜெயின் கோவில் ஒன்று உள்ளது. இதில் இருந்த 10 வெள்ளி அலங்கார பொருட்கள் மற்றும் 3 பித்தளை பொருட்கள் உள்ளிட்டவை கடந்த சில நாட்களுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

இதுபற்றி லம்தா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, விலை மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்ற திருடனை கூடுதல் போலீஸ் சூப்பிரெண்டு விஜய் தபார் தலைமையிலான போலீசார் குழு தேடி வந்தனர்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் லம்தா பகுதியில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் அருகே ஒரு சிறிய குழி ஒன்றில் பை ஒன்று கிடந்து உள்ளது. இதனை ஜெயின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் பார்த்து உள்ளனர்.

இதனையடுத்து, அவர்கள் போலீசை தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளனர். இதில், போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பையில், கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களுடன் திருடன் எழுதி வைத்திருந்த மன்னிப்பு கடிதம் ஒன்றும் இருந்துள்ளது.

அந்த கடிதத்தில், எனது செயலுக்காக நான் மன்னிப்பு கோருகிறேன். நான் தவறு செய்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். இந்த திருட்டு சம்பவத்திற்கு பின்னர் அதிகம் பாதிக்கப்பட்டு விட்டேன் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த கடிதம் அடங்கிய புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளிவந்து வைரலானது. அந்த பொருட்களை கைப்பற்றிய போலீசார் திருடனை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story