ஜம்மு-காஷ்மீர்: புலம்பெயர் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு - 2 பேர் காயம்


ஜம்மு-காஷ்மீர்: புலம்பெயர் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு - 2 பேர் காயம்
x
தினத்தந்தி 24 Sep 2022 6:27 PM GMT (Updated: 24 Sep 2022 6:35 PM GMT)

ஜம்மு காஷ்மீரில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் இருவர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த தொழிலாளர்கள் பீகாரை சேர்ந்த ஷம்ஷாத் மற்றும் பைசான் கஸ்ரி என்பது தெரியவந்துள்ளது.



Next Story