செந்தில்பாலாஜி ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பளிக்கிறது சுப்ரீம் கோர்ட்டு


செந்தில்பாலாஜி ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பளிக்கிறது சுப்ரீம் கோர்ட்டு
x

செந்தில்பாலாஜி ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பளிக்கிறது.

புதுடெல்லி,

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்ததாக அமலாக்கத்துறையும் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு தொடர்ந்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை செந்தில் பாலாஜி சார்பில் வக்கீல் தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது அமலாக்கத்துறையிடம் சுப்ரீம் கோர்ட்டு சரமாரியாக கேள்வி எழுப்பியது. இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், செந்தில்பாலாஜியின் ஜாமீன் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில், பணமோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டு நாளை (புதன்கிழமை) தீர்ப்பளிக்கிறது. இதனால் நாளை செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story