விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள்களில் இருந்து சிக்னல் வரவில்லை - இஸ்ரோ


விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள்களில் இருந்து சிக்னல் வரவில்லை - இஸ்ரோ
x

விண்ணில் ஏவப்பட்ட 2 செயற்கைக்கோள்களில் இருந்து சிக்னல் வரவில்லை என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஸ்ரீஹரிகோட்டா,

புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உள்ளிட்ட 2 செயற்கைக்கோளுடன், இஸ்ரோவின் சிறிய ரக ராக்கெட்டான எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட் இன்று காலை 9.18 மணியளவில் விண்ணில் பாய்ந்தது.

புவி கண்காணிப்பிற்கு ஈஒஎஸ்-02 என்ற செயற்கை கோளுடன், கிராமப்புற மாணவிகள் உருவாக்கிய அசாதி சாட் செயற்கோள் எஸ்.எஸ்.எல்.வி.டி1 ராக்கெட்டில் விண்ணில் ஏவப்பட்டது.

இந்நிலையில், விண்ணில் ஏவப்பட்ட செயற்கைகோள்களில் இருந்து இதுவரை சிக்னல் வரவில்லை என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

விண்ணில் ஏவப்பட்டதில் இருந்து முதல், 2-வது, 3-வது நிலைகளை ராக்கெட் வெற்றிகரமாக கடந்ததாகவும் ஆனால் இறுதி கட்டத்தில் செயற்கைகோள்களில் இருந்து சிக்னல் வரவில்லை என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

2 செயற்கைக்கோள்கள் மற்றும் அதை சுமந்து சென்ற ராக்கெட்டில் இருந்து சிக்னல் வரவில்லை என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

செயற்கைக்கோள்கள் மற்றும் ராக்கெட்டை மீண்டும் தொடர்புகொள்ளும் முயற்சிகளும், சிக்னலை மீண்டும் உறுதி செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள்கள், ராக்கெட்டின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க... 2 செயற்கைக்கோளுடன் எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது - இஸ்ரோ புதிய சாதனை...!


Next Story