ராணுவ வீரரின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த வீட்டு உரிமையாளர் - அதிர்ச்சி சம்பவம்


ராணுவ வீரரின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த வீட்டு உரிமையாளர் - அதிர்ச்சி சம்பவம்
x

ராணுவ வீரரின் மனைவியை வீட்டு உரிமையாளர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

சண்டிகர்,

அரியானா மாநிலம் அம்பாலாவை சேர்ந்த ராணுவ வீரர் தனது மனைவியுடன் அதேபகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

இதனிடையே, அந்த வீரர் ராணுவ பணிக்காக சென்றுவிட்டதால் அவரது மனைவி மட்டுமே அந்த வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், அந்த பெண் தனியாக இருந்த நேரத்தில் வீட்டிற்கு வந்த அந்த வாடகை வீட்டின் உரிமையாளர் சோகன் சிங் ராணுவத்தில் பணியாற்றும் கணவர் விபத்தில் சிக்கிவிட்டதாக கூறியுள்ளார். மேலும், இது குறித்து அறிய தன்னுடன் வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண், சோகன் சிங்கின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணை வீட்டு உரிமையாளர் சோகன் சிங் பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இது குறித்து யாரிடமாவது தெரிவித்தால் கொலை செய்துவிடுவோன் என்று மிரட்டியுள்ளார்.

தனக்கு நடந்த கொடூர சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story