ஆற்றுப்படுகையில் கவிழ்ந்த ஆட்டோ - 6 பேர் பலி


ஆற்றுப்படுகையில் கவிழ்ந்த ஆட்டோ - 6 பேர் பலி
x

ஆட்டோவில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 15 பேர் பயணித்தனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் யவத்மல் மாவட்டம் ஜவகர் நகர் பகுதியில் வசித்து வரும் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 15 பேர் நேற்று ஆட்டோவில் ஊர்மி பொஹ்ரா தேவி பகுதி நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

பெல்ஹவன் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ ஆற்றுப்படுகைக்குள் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோரவிபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story