பாதயாத்திரையில் பங்கேற்றவர்களுக்கு வெள்ளி நாணயம், இனிப்புகள் ராகுல்காந்தி வழங்கிய தீபாவளி பரிசு


பாதயாத்திரையில் பங்கேற்றவர்களுக்கு வெள்ளி நாணயம், இனிப்புகள் ராகுல்காந்தி வழங்கிய தீபாவளி பரிசு
x
தினத்தந்தி 25 Oct 2022 10:45 PM GMT (Updated: 25 Oct 2022 10:45 PM GMT)

தனது தீபாவளி பரிசாக வெள்ளி நாணயம், இனிப்புகள் ஆகியவற்றை அனுப்பி வைத்துள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமை பயணம் என்ற பாதயாத்திரையை தொடங்கினார். கேரளா, கர்நாடகா வழியாக தெலுங்கானாவை அடைந்தார். தீபாவளிக்காக 3 நாட்கள் விடுமுறை அளித்துவிட்டு, அவர் டெல்லி திரும்பினார். இந்தநிலையில், பாதயாத்திரை முழுவதும் தன்னுடன் பங்கேற்றவர்கள், தங்கும் இடங்களில் பணியாற்றியவர்கள், வாகன டிரைவர்கள் ஆகியோருக்கு ராகுல்காந்தி ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

தனது தீபாவளி பரிசாக வெள்ளி நாணயம், இனிப்புகள் ஆகியவற்றை அனுப்பி வைத்துள்ளார். கடிதத்தில் ராகுல்காந்தி கூறியிருப்பதாவது:-

இந்திய ஒற்றுமை பயணத்தில், நாம் கைகோர்த்து செயல்பட்டுள்ளோம். உங்கள் மீதான உங்களது நம்பிக்கை, இந்தியாவின் உண்மையான பாரம்பரியத்தில் கொண்டுள்ள நம்பிக்கை ஆகியவை வெறுப்புணர்வை தோற்கடித்து, நாம் செல்லும் பாதைக்கு ஒளியூட்டும். பேச வேண்டாம், செயல்படுங்கள். வாக்குறுதி அளிக்கவேண்டாம், நிரூபித்து காட்டுங்கள். தங்களுக்கும், தங்கள் குடும்பத்துக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story