எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு


எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 8 Aug 2023 7:59 AM GMT (Updated: 8 Aug 2023 8:11 AM GMT)

எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதல் அவையில் எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை எழுப்பி வருகின்றன. குறிப்பாக மணிப்பூர் விவகாரம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது.

மணிப்பூர் வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மணிப்பூர் வன்முறை உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து மாநிலங்களவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.


Next Story