மக்கள் நலனில் பிரதமருக்கு அக்கறை இல்லை - ராகுல்காந்தி காட்டம்


மக்கள் நலனில் பிரதமருக்கு அக்கறை இல்லை - ராகுல்காந்தி காட்டம்
x

கோப்புப்படம்

தனது டீ-ஷர்ட் குறித்து கேள்வி எழுப்பும் ஊடகங்கள், விவசாயிகளின் கிழிந்த ஆடை குறித்து ஏன் கேள்வி எழுப்புவதில்லை என்று ராகுல்காந்தி கேட்டுள்ளார்.

லக்னோ,

தனது டீ-ஷர்ட் குறித்து கேள்வி எழுப்பும் ஊடகங்கள், ஏழை குழந்தைகள், விவசாயிகள் மற்றும் விவசாயிகளின் கிழிந்த ஆடை குறித்து ஏன் கேள்வி எழுப்புவதில்லை என்று ராகுல்காந்தி கேட்டுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர்கள் பாத யாத்திரையாக செல்லும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா, மராட்டியம், ராஜஸ்தான், அரியானா, டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்கள் வழியாக தற்போது உத்தரபிரதேசத்தை சென்றடைந்துள்ளது.

இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் பேசிய ராகுல்காந்தி, தனது டீ -ஷர்ட் குறித்து சர்ச்சைகள் பரப்புவதாக தெரிவித்தார். குளிர்காலத்தில் ஏழை குழந்தைகளும், விவசாயிகளும், கூலி தொழிலாளிகளும் போர்வை கூட இல்லாமல், கிழிந்த ஆடையுடன் இருப்பதாக குறிப்பிட்டார்.

மேலும் பிரதமர் மோடியின் அரசு மக்கள் குறித்து சிந்திப்பதில்லை என்றும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துவதில்லை என்றும் சாடினார்.


Next Story