4-வது வந்தே பாரத் விரைவு ரெயில் - இமாச்சலப் பிரதேசத்தில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்


4-வது வந்தே பாரத் விரைவு ரெயில் - இமாச்சலப் பிரதேசத்தில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
x

4-வது வந்தே பாரத் விரைவு ரெயில் சேவையை இமாச்சலப் பிரதேசத்தில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி இன்று இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு செல்கிறார். அங்கு சென்ற பிரதமர் மோடி 4-வது வந்தே பாரத் விரைவு ரெயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த ரெயில் டெல்லி மற்றும் உனாவின் அம்ப் அன்தெளராவுக்கும் இடையே இயக்கப்பட உள்ளது.

மேலும் அங்கு கட்டி முடிக்கப்பட்டுள்ள ஐ.ஐ.டி-யை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். ஹரோலியில் ரூ.1900 கோடி செலவில் கட்டப்படவுள்ள மருந்துப் பூங்காவுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

இதனையடுத்து, சம்பாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் இரண்டு புனல் மின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் 3 ஆம் கட்ட பிரதமரின் கிராம சாலை திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.


Next Story