உலகம் ஒரே குடும்பம்... உதவுவது இந்தியாவின் கடமை; துருக்கி மீட்புபணியில் ஈடுபட்ட குழுவினர் மத்தியில் பிரதமர் மோடி உரை


உலகம் ஒரே குடும்பம்... உதவுவது இந்தியாவின் கடமை; துருக்கி மீட்புபணியில் ஈடுபட்ட குழுவினர் மத்தியில் பிரதமர் மோடி உரை
x

நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்க ‘ஆபரேஷன் தோஸ்த்’ என்ற பெயரில் இந்திய மீட்புக்குழுவினர் துருக்கிக்கு விரைந்து சென்று மீட்புபணியில் ஈடுபட்டனர்.

புதுடெல்லி,

துருக்கி-சிரியாவில் கடந்த 6-ம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட துருக்கிக்கு உலகின் பல்வேறு நாடுகள் மீட்பு மற்றும் உதவிகளை வழங்கின.

பல்வேறு நாடுகள் தங்கள் மீட்புக்குழுக்களை அனுப்பி வைத்தன. அந்த வகையில் 'ஆபரேஷன் தோஸ்த்' என்ற பெயரில் இந்தியாவும் துருக்கிக்கு மீட்புக்குழுக்களை அனுப்பி வைத்தது. தேசியபேரிடர் மீட்புக்குழுவை சேர்ந்த 3 பிரிவின் 151 வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். மேலும், தேசியபேரிட மீட்புக்குழுவின் மோப்ப நாய்களும் மீட்பு பணியில் ஈடுபட்டன.

இந்நிலையில், மீட்புப்பணிகளை முடித்துக்கொண்டு துருக்கியில் இருந்து இந்திய மீட்புக்குழுவினர் இன்று நாடு திரும்பினர். அவர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார்.

ஆபரேஷன் தோஸ்த் திட்டத்தில் துருக்கியில் மீட்பு பணியில் ஈடுபட்ட குழுவினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் கூறுகையில், நமது மோப்பநாய்கள் குழு உறுப்பினர்கள் தங்கள் வலிமையை வெளிப்படுத்தினர். உங்களை கண்டு நாடு பெருமைபடுகிறது. நமது கலாசாரம் நமக்கு வசுதேவ குடும்பத்தை கற்றுக்கொடுத்துள்ளது.

ஒட்டுமொத்த உலகத்தையும் நாம் ஒரே குடும்பமாக பார்க்கிறோம். குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர் பிரச்சினையில் இருக்கும்போது அவருக்கு உதவுவது இந்தியாவின் கடமை' என்றார்.


Next Story