புதிதாக 77 பேருக்கு கொரோனா- தொற்றுக்கு ஒருவர் பலி


புதிதாக 77 பேருக்கு கொரோனா- தொற்றுக்கு ஒருவர் பலி
x

கோப்புப்படம் 

நேற்று காலை நிலவரப்படி, 1,533 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

புதுடெல்லி,

நாட்டில் நேற்று முன்தினம் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், தினசரி பாதிப்பு 77 ஆக உயர்ந்தது. இதுவரை கொரோனாவுக்கு ஆளானவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 95 ஆயிரத்து 802 ஆக அதிகரித்தது.

கொரோனாவுக்கு 24 மணி நேரத்தில் 25 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 44 லட்சத்து 62 ஆயிரத்து 351 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் ஒரேயடியாக 51 அதிகரித்தது. நேற்று காலை நிலவரப்படி, 1,533 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

2 நாட்களாக உயிரிழப்பு இல்லாத நிலையில் நேற்று ஒருவர் உயிரிழந்தார். மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 918 ஆக அதிகரித்தது.


Next Story