சம்பள பாக்கி கேட்ட டிரைவரை 'பெல்ட்'டால் அடித்து சட்டையை கிழித்து மானபங்கப்படுத்திய பெண் ஊழியர்கள் - வீடியோ


சம்பள பாக்கி கேட்ட டிரைவரை பெல்ட்டால் அடித்து சட்டையை கிழித்து மானபங்கப்படுத்திய பெண் ஊழியர்கள் - வீடியோ
x
தினத்தந்தி 19 Sep 2022 10:37 AM GMT (Updated: 19 Sep 2022 10:38 AM GMT)

டிரைவரை பெண் ஊழியர்கள் 'பெல்ட்'டால் அடித்து, சட்டையை கிழித்து மானபங்கப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராய்ப்பூர்,

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்த ராகுல் டிராவல்ஸ் என்ற தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் கார் டிரைவராக பணியாற்றி வந்தவர் தினேஷ். இவருக்கு கடந்த மே மற்றும் ஜூன் மாதத்திற்கான சம்பளத்தை அந்த நிறுவனம் வழங்கவில்லை.

இந்நிலையில், ராய்ப்பூர் விமான நிலையம் அருகே அமைந்துள்ள அந்த டிராவல்ஸ் நிறுவனத்திற்கு இன்று சென்ற ராகுல் அங்கு பணியில் இருந்த பெண் ஊழியர்களிடம் தனக்கான சம்பள பாக்கியை தருமாறு கேட்டுள்ளார்.

ஆனால், பெண் ஊழியர்கள் தகாத வார்த்தைகள் கூறி ராகுலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ராகுல் நிறுவனத்தின் மேலாளர் செல்போன் எண்ணை தரும்படி பெண் ஊழியர்களிடம் கேட்டுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த பெண் ஊழியர்கள் ராகுலை சரமாரியாக தாக்கியுள்ளனர். விமான நிலையத்திற்கு வெளியே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

5-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து ராகுலை கடுமையாக தாக்கினர். ராகுலின் சட்டையை கிழித்து மானபங்கப்படுத்தியதுடன் அவரை 'பெல்ட்'டால் கடுமையாக தாக்கினர். பெண் ஊழியர்கள் தாக்குவதை அருகில் இருந்தவர்கள் வேடிக்கை பார்த்ததுடன் தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. தன் மீது தாக்குதல் நடத்திய பெண் ஊழியர்கள் மீது ராகுல் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




Next Story