ஒடிசா: கிரிக்கெட் விளையாடியபோது 28 வயது இளைஞர் திடீர் மரணம்


ஒடிசா:  கிரிக்கெட் விளையாடியபோது 28 வயது இளைஞர் திடீர் மரணம்
x

அவருடைய மரணத்திற்கான பின்னணி பற்றி உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

கட்டாக்,

ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் பைசிங்கா காவல் நிலையத்திற்கு உட்பட்ட மனாத்ரி பகுதியை சேர்ந்தவர் பிகாஷ் கர் (வயது 28). அவர், மனாத்ரி மினி ஸ்டேடியத்தில் நேற்று (ஞாயிற்று கிழமை) கிரிக்கெட் விளையாடினார்.

அப்போது, உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்நபர் திடீரென சரிந்து விழுந்திருக்கிறார். இதனால், அவருடன் விளையாடியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் அறிவித்தனர்.

அவருடைய மரணத்திற்கான பின்னணி பற்றி உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது என போலீசார் தெரிவித்தனர். அவரின் உடலானது, பரிபாத பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இதுபற்றி வழக்கு பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story