நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்; அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழகம் சார்பில் தி.மு.க., அ.தி.மு.க. எம்.பி.க்கள் பங்கேற்பு


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்; அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழகம் சார்பில் தி.மு.க., அ.தி.மு.க. எம்.பி.க்கள் பங்கேற்பு
x

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு டெல்லியில் நடந்து வரும் அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழகம் சார்பில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் கலந்து கொண்டுள்ளனர்.



புதுடெல்லி,



நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை (ஜூலை 18ந்தேதி) தொடங்கி வருகிற ஆகஸ்டு 12ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரின்போது, ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் டெல்லியில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

இதில், மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. மிதுன் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மாநிலங்களவையை சுமுகமாக நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் துணை ஜனாதிபதி மற்றும் மாநிலங்களவை தலைவரான வெங்கையா நாயுடு இன்று கூட்டியுள்ளார்.

டெல்லியில் நாடாளுமன்ற கட்டிடத்தில் நடந்த இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய நாடாளுமன்ற விவகார மந்திரி பிரலாத் ஜோஷி மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர். அ.தி.மு.க. எம்.பி. டாக்டர் எம். தம்பிதுரை, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. விஜயசாய் ரெட்டி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. பந்தோபாத்யாய் மற்றும் அப்னா தல் எம்.பி. சுப்ரியா பட்டேல் ஆகியோரும் வருகை தந்துள்ளனர்.

இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் சார்பில் எம்.பி.க்கள் மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், ராஷ்டீரிய லோக் தள கட்சி எம்.பி. ஜெயந்த் சவுத்ரி, தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்துள்ளனர்.


Next Story