மணிப்பூர் நிலச்சரிவு: மேலும் 4 உடல்கள் மீட்பு, பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு


மணிப்பூர் நிலச்சரிவு: மேலும் 4 உடல்கள் மீட்பு, பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு
x

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.

இம்பால்,

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் நோனே மாவட்டத்தில் துபுல் என்ற இடத்தில் ரெயில்வே கட்டுமானப் பணி நடந்துவருகிறது. கடந்த புதன்கிழமை இரவு அப்பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களும், அவர்களின் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டிருந்த ராணுவ வீரர்களும் நிலச்சரிவில் சிக்கினர். ராணுவத்தினர் உள்ளிட்ட மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியை மேற்கொண்டனர்.

இந்நிலையில், 5-வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில், இன்று மேலும் 4 பேரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் மாயமான 20 பேரைதேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


Next Story