வீட்டின் முன் சிறுநீர் கழித்த நபரை தட்டிக்கேட்ட குடும்பத்தினர் மீது துப்பாக்கிச்சூடு- ஒருவர் உயிரிழப்பு


வீட்டின் முன் சிறுநீர் கழித்த நபரை தட்டிக்கேட்ட குடும்பத்தினர் மீது துப்பாக்கிச்சூடு- ஒருவர் உயிரிழப்பு
x

கோப்புப்படம் 

பிந்து ஷர்மாவின் இந்த செயலால் ஆத்திரமடைந்த விகாஷ் சிங்கின் குடும்பத்தினர், அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் நாயகோன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட் கிராமத்தில் பிந்து ஷர்மா என்ற நபர், அப்பகுதியில் உள்ள விகாஷ் சிங் என்பவரது வீட்டின் முன்பு அடிக்கடி சிறுநீர் கழித்துள்ளார். அதுவும் பட்டப்பகலில் இதனை செய்துள்ளார்.

பிந்து ஷர்மாவின் இந்த செயலால் ஆத்திரமடைந்த விகாஷ் சிங்கின் குடும்பத்தினர், அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர்.

இதனால், கடும் கோபமடைந்த பிந்து ஷர்மா, மதுபோதையில், தனது நண்பர் ஒருவரை அழைத்துக்கொண்டு விகாஷ் சிங் வீட்டிற்கு சென்று வீட்டில் உள்ளவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

இதில் வீட்டில் இருந்த மூன்று பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 12 வயது சிறுவன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார், குற்றவளியான பிந்து ஷர்மாவையும், அவரது கூட்டாளியையும் கைதுசெய்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story