நடைப்பயிற்சி சென்ற முதியவரைக் கடித்து குதறிய நாய்கள்-உடலை தரதரவென இழுத்துச் சென்ற பயங்கரம்..!


நடைப்பயிற்சி சென்ற முதியவரைக் கடித்து குதறிய நாய்கள்-உடலை தரதரவென இழுத்துச் சென்ற பயங்கரம்..!
x

தெரு நாய்கள் தாக்கியதில் நடைபயிற்சியில் ஈடுபட்ட முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

லக்னோ,

உத்தரப் பிரதேசத்தின் அலிகார் பல்கலைக்கழக வளாகத்தில் பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவிற்கு காலையில் சப்தர் அலி என்ற 65 வயதான ஓய்வுபெற்ற மருத்துவர் உயிரிழந்திருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராவை போலீசார் ஆய்வுசெய்ததில், அந்த முதியவரை அப்பகுதியில் சுற்றித்திரிந்துகொண்டிருந்த நாய்கள், தாக்கியதால், அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

நடைபயிற்சியில் ஈடுபட்ட முதியவரை சுமார் 7 முதல் 8 நாய்கள் வரை அவரை விடாமல் கடித்துக்குதறின. பின்னர் அவரை அந்த நாய்கள் தரதரவென இழுத்துச்சென்ற பயங்கரம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.

நாய்கள் தாக்கியதில் உயிரிழந்த முதியவரின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story