2024 தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும் - மம்தா பானர்ஜி


2024 தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும் - மம்தா பானர்ஜி
x

Image Courtesy: PTI

2024-ல் ஆட்சியில் இருந்து பாஜகவை அகற்றுவதே தனது கடைசி போராட்டம் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

மேற்குவங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று கட்சி பேரணியில் பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய மம்தா பானர்ஜி, 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்படவேண்டும். டெல்லியில் ஆட்சியில் இருந்து பாஜகவை அகற்றுவதே எனது கடைசி போராட்டம். எந்த விலை கொடுத்தாயினும் பாஜக தோற்கடிக்கப்படவேண்டும்.

மேற்குவங்காளத்தை பாதுகாப்பது நமது முதல் போராட்டம். 2024-ல் மத்தியில் ஆட்சியில் இருந்து பாஜகவை நாம் நீக்குவோம் என நான் உறுதியளிக்கிறேன். தோல்வியை அனைவரும் சந்திக்க வேண்டும். இந்திரா காந்தி வலிமையான அரசியல் தலைவர், ஆனால் அவரும் தோல்வியை சந்தித்துள்ளார். பாஜக சுமார் 30 எம்.பி.க்களை வைத்துள்ளது. ஆனால், பீகார் கைநழுவி சென்றுவிட்டது. அதேபோன்று நிறைய வர உள்ளன. தேர்தல் வரும் முன் பாஜகவில் தலைவர்களே இல்லாத சூழ்நிலை ஏற்படும்' என்றார்.


Next Story