மராட்டியத்தில் ஓடும் பேருந்தில் திடீர் தீ விபத்து: பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்


மராட்டியத்தில் ஓடும் பேருந்தில் திடீர் தீ விபத்து: பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்
x
தினத்தந்தி 1 July 2023 12:39 AM GMT (Updated: 1 July 2023 1:33 AM GMT)

மராட்டியத்தில் ஓடும் பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலம் புல்தானாவில் உள்ள சம்ருத்தி மஹாமார்க் விரைவு சாலையில் பேருந்து ஒன்று திடீர் தீப்பிடித்து எரிந்ததில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இது சம்பவம் தொடர்பாக தகவலிருந்த சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிகாலை என்பதால் பயணிகள் அயர்ந்து தூங்கி கொண்டிருக்கும் போது இந்த அசாம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. பஸ் தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை


Next Story