ஒடிசாவில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம்
ஒடிசாவின் கோரபுட் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 3.8 ஆக பதிவானது.
கோராபுட்,
ஒடிசாவின் கோரபுட் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 3.8 ஆக பதிவானது. மேலும் நாராயண்பட்னா, லக்ஷ்மிபூர் ஆகிய இடங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்ததாக கூறப்படுகிறது. அதிகாலை 5 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் நன்கு தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் அச்சம் அடைந்தனர். சில இடங்களில் மக்கள் வெளியில் வந்ததாகவும் அங்குள்ள ஊடகங்கள் கூறுகின்றன. நில அதிர்வால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் எதுவும் இல்லை.
Related Tags :
Next Story