அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் நாளை தீர்ப்பு


அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் நாளை தீர்ப்பு
x

அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் ஆம் ஆத்மி அரசு அமல்படுத்திய புதிய மதுபான கொள்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து 9 முறை சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகாததால், கடந்த மார்ச் மாதம் கெஜ்ரிவாலை அவரது வீட்டில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.

தன்னை கைது செய்ததை எதிர்த்தும், நீதிமன்ற காவலில் வைத்திருப்பதை எதிர்த்தும், சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை தரப்பு, கெஜ்ரிவால் தரப்பு வாதங்களை விசாரித்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா நாளை(ஜூலை 12) தீர்ப்பை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story