ஜம்மு காஷ்மீர் தேர்தலில் தனித்து போட்டி: பாஜக அறிவிப்பு


ஜம்மு காஷ்மீர் தேர்தலில் தனித்து போட்டி:  பாஜக அறிவிப்பு
x

ஜம்முகாஷ்மீர் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட போவதாக பாஜக தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த 370 சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக அங்கு சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது. அடுத்த மாதம் 3, 10 மற்றும் அக்டோபர் 1 என மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது. ஜம்மு காஷ்மீர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன.

இந்த நிலையில், ஜம்முகாஷ்மீர் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட போவதாக பாஜக அறிவித்துள்ளது. இது குறித்து மாநில பா.ஜ.க தலைவர் ரவீந்தர் ரெய்னா கூறியதாவது: ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தலுக்கு கட்சி முழுமையாக தயாராகிவிட்டது, வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் விரைவில் வெளியிடப்படும் . ஜம்மு காஷ்மீரில் எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் பாஜக தேர்தலுக்கு முன் கூட்டணி வைக்காது.

அதே நேரத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் 8 முதல் 10 சுயேச்சை வேட்பாளர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டால் கூட்டாக தேர்தலில் போட்டியிடுவதற்கான வியூகம் வகுப்போம் என்றார்.


Next Story