நடுவானில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; அவசர அவசரமாக டெல்லியில் தரையிறக்கம்
200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தது.
டெல்லி,
தலைநகர் டெல்லியில் இருந்து இன்று மதியம் மேற்குவங்காளத்தின் பஹ்டொஹ்ரா நகர் நோக்கி இண்டிகோ விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 200க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.
விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதை கண்டறிந்த விமானி உடனடியாக விமானத்தை டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கினார். இந்த நிகழ்வில் பயணிகள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இதனை தொடர்ந்து மாற்றுவிமானம் மூலம் பயணிகள் மேற்குவங்காளத்திற்கு அனுப்பு வைக்கப்பட்டனர். நடுவானில் தொழில்நுட்ப கோளாறை கண்டறிந்து விமானத்தை டெல்லி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கிய விமானியை பலரும் பாராட்டினர்.
Related Tags :
Next Story