'எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு இந்தியாவில் சகிப்புத்தன்மை மிகவும் குறைவு' - ஜெய்சங்கர்


எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு இந்தியாவில் சகிப்புத்தன்மை மிகவும் குறைவு - ஜெய்சங்கர்
x

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு இந்தியாவில் சகிப்புத்தன்மை மிகவும் குறைவு என மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் நடைபெற்ற சி.ஐ.ஐ. வருடாந்திர தொழிலதிபர்கள் மாநாட்டில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"நமது அண்டை நாடான பாகிஸ்தானை பொறுத்தவரை, அவர்கள் இடைவிடாமல் பயங்கரவாதத்தை நடைமுறைப்படுத்தி வந்தனர். நாமும் அதனுடனேயே வாழ வேண்டும் என்பதைப் போல் முன்பு நமது அணுகுமுறை இருந்து வந்தது.

ஆனால் 2014-ல் இந்த தேச மக்கள் மிகத் தெளிவான முடிவை எடுத்தார்கள். இந்தியாவில் தற்போது எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு சகிப்புத்தன்மை மிகவும் குறைவாக இருக்கிறது. பயங்கரவாத தாக்குதல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்ற செய்தியை நாம் கொடுத்திருக்கிறோம்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story