இந்தியாவில் வெகுவாக குறைந்த கொரோனா பாதிப்பு - 33 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி


இந்தியாவில் வெகுவாக குறைந்த கொரோனா பாதிப்பு - 33 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி
x

கொரோனா தொற்று பாதிப்பு 2020 மார்ச் மாதத்துக்கு பிறகு நேற்று குறைந்த எண்ணிக்கையில் பதிவாகி உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் நேற்று முன்தினம் 47 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று 33 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதியானது. 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் பதிவான மிகக்குறைந்த பாதிப்பு இது ஆகும். இதுவரை இந்த தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 94 ஆயிரத்து 32 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றில் இருந்து நேற்று ஒரு நாளில் 82 பேர் மீண்டனர். இதுவரை இப்படி 4 கோடியே 44 லட்சத்து 60 ஆயிரத்து 523 பேர் மீண்டுள்ளனர். தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 49 குறைந்தது.

இதையடுத்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,606 ஆகக் குறைந்துள்ளது. தொற்றால் நேற்றும் உயிரிழப்பு இல்லை. இதனால் தொற்றால் இறந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 903 ஆக நீடிக்கிறது.


Next Story