இமாசலபிரதேச மாநிலத்தில் நிலச்சரிவில் உயிருடன் புதைந்த 2 பெண்கள்


இமாசலபிரதேச மாநிலத்தில் நிலச்சரிவில் உயிருடன் புதைந்த 2 பெண்கள்
x

கோப்புப்படம்

இமாசலபிரதேச மாநிலத்தில் நிலச்சரிவில் 2 பெண்கள் உயிருடன் புதைந்தனர்.

சிம்லா,

இமாசலபிரதேச மாநிலம் குல்லு மாவட்டத்தில் நேற்று காலை 9 மணி அளவில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் காடெல் கிராமத்தில் வீடு இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் உயிருடன் புதையுண்டனர்.

தகவல் அறிந்து பேரிடர் மீட்பு படையினர் அங்கு வரவழைக்கப்பட்டனர். புதையுண்டவர்களின் பெயர்கள் சவேலு தேவி (வயது55), கிரித்திகா(17) என்று தெரியவந்துள்ளது. ஆனால் அவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.


Next Story