மருத்துவக்கல்லூரிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை


மருத்துவக்கல்லூரிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை
x
தினத்தந்தி 11 Dec 2023 12:23 PM GMT (Updated: 11 Dec 2023 12:33 PM GMT)

கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு இளம்பெண் சிகிச்சைக்கு வந்துள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு உடல் நலக்குறைவு காரணமாக இளம்பெண் ஒருவர் சிகிச்சைக்கு வந்துள்ளார்.

இதனிடையே அந்த மருத்துவமனையின் அருகில் டீக்கடை நடத்தி வருபவர் சத்யம். இவருக்கும் அந்த இளம்பெண்ணுக்கு டீக்கடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வழக்கம்போல் நேற்று டீ குடிக்க வந்த இளம்பெண்ணிடம் சத்யம் தனது போனை சார்ஜ் செய்ய உதவுமாறு அப்பெண்ணை மருத்துவமனைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் அழைத்திருக்கிறார்.

இதையடுத்து அந்த பெண் காருக்குள் ஏறியிருக்கிறார். அப்போது சத்யம் மற்றும் காரில் இருந்த மேலும் 2 பேர் அப்பெண்ணை காருக்குள் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் பாதிக்கப்பட்ட அப்பெண்ணை சாலையில் தள்ளிவிட்டு காரில் தப்பி சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய சத்யம் உட்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story