காஷ்மீரில் என்கவுண்ட்டர்; 4 பயங்கரவாதிகள் சுட்டு கொலை


காஷ்மீரில் என்கவுண்ட்டர்; 4 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
x

ஜம்மு மற்றும் காஷ்மீரின் தோடா மாவட்டத்தின் கந்தோ பகுதியில் கடந்த மாதம் நடந்த என்கவுண்ட்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் மோதர்காம் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து, மத்திய ரிசர்வ் போலீசார், உள்ளூர் போலீசார் ஆகியோருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அவர்கள் கிராமத்திற்குள் நுழைந்ததும், அந்த பகுதியை பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தி, தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்போது, திடீரென பயங்கரவாதிகள் வீரர்களை நோக்கி சுட்டனர். இதில் வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. எனினும், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்து விட்டார்.

இந்நிலையில், படையினரின் அதிரடி தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். கடந்த மாதம், தோடா மாவட்டத்தின் கந்தோ பகுதியில் நடந்த என்கவுண்ட்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.


Next Story