பெண்ணை கன்னத்தில் அறைந்தாரா பா.ஜ.க மூத்த தலைவர்? - வெளியானது வைரல் வீடியோ


x

டெல்லியில், பெண்ணை கன்னத்தில் அறைந்ததாக எழுந்த சர்ச்சை குறித்து பா.ஜ.க. மூத்த தலைவர் விஜய் கோயல் விளக்கமளித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில், பெண்ணை கன்னத்தில் அறைந்ததாக எழுந்த சர்ச்சை குறித்து பா.ஜ.க. மூத்த தலைவர் விஜய் கோயல் விளக்கமளித்துள்ளார்.

டெல்லி மாடல் டவுன் பகுதியில், தெருநாய்களின் அட்டகாசத்தை கட்டுப்படுத்துவது குறித்த செயல்திட்டம் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களுடன், பா.ஜ.க மூத்த தலைவர் விஜய் கோயல் பேசிக் கொண்டிருந்தார். அவரது பேச்சை அங்கிருந்த பெண் ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்ததால், விஜய் கோயல் ஆத்திரத்துடன் எழுந்து, பெண் செய்தியாளரின் செல்போனை பறித்ததாகவும், பெண் ஒருவரை கன்னத்தில் அறைந்ததாகவும் வீடியோக்கள் பதிவிடப்பட்டன.

இந்த நிலையில், அந்த உரையாடலின் போது பதிவு செய்யப்பட்ட மற்றொரு வீடியோவை விஜய் கோயல் வெளியிட்டுள்ளார். அதில் தனது பேச்சை வீடியோ பதிவு செய்ய வேண்டாமென கூறுவதுபோல் இடம்பெற்றுள்ளது. உண்மையில் என்ன நடந்தது என்பதை மறைக்கும் வகையில், மற்றொரு கோணத்தில் இருந்து வீடியோ பதிவு செய்யப்பட்டு, தனக்கு எதிராக வெளியிடப்பட்டுள்ளதாக விஜய் கோயல் கூறியுள்ளார்.


Next Story