டெல்லியில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா - புதிதாக 1,527 பேருக்கு தொற்று உறுதி


டெல்லியில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா - புதிதாக 1,527 பேருக்கு தொற்று உறுதி
x

டெல்லியில் தற்போது 3,962 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெல்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 909 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், டெல்லியில் தற்போது 3,962 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Next Story