'நீட்' தேர்வை தள்ளிவைக்க கோரிய மனு: டெல்லி ஐகோர்ட்டில் இன்று விசாரணை


நீட் தேர்வை தள்ளிவைக்க கோரிய மனு: டெல்லி ஐகோர்ட்டில் இன்று விசாரணை
x

கோப்புப்படம்

‘நீட்’ தேர்வை தள்ளிவைக்க கோரிய மனு மீது டெல்லி ஐகோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது.

புதுடெல்லி,

டெல்லி ஐகோர்ட்டில் அனுபவா ஸ்ரீவாஸ்தவா என்பவர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தற்போது பெய்துவரும் பருவமழை, மிகவும் தொலைவில் உள்ள 'நீட்' தேர்வு மையங்களை கருத்தில்கொண்டு, ஜூலை 17-ந் தேதி நடைபெற உள்ள 'நீட்' இளநிலை தேர்வை தள்ளிவைக்க வேண்டும்.

இத்தேர்வில் பங்கேற்க மேலும் ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரி டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா தலைமையிலான அமர்வு முன் வக்கீல் மம்தா சர்மா முறையிட்டார். அந்த முறையீட்டை பரிசீலித்த ஐகோர்ட்டு, இன்று இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது.


Next Story