போலீசார் என்கவுண்டரில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை


போலீசார் என்கவுண்டரில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
x

போலீசார் நடத்திய என்கவுண்டரில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்

மும்பை,

சத்தீஸ்கர், மராட்டியம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு தனிப்படை போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மராட்டிய மாநிலம் கட்சிரோலி மாவட்டம் கிட்மரா வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் வனப்பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து, போலீசார் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது.

இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதலில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் மேலும் சில நக்சலைட்டுகள் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் அப்பகுதியில் போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story