தினசரி கொரோனா பாதிப்பு 46 ஆக உயர்ந்தது - தொடர்ந்து 3-வது நாளாக உயிரிழப்பு இல்லை


தினசரி கொரோனா பாதிப்பு 46 ஆக உயர்ந்தது - தொடர்ந்து 3-வது நாளாக உயிரிழப்பு இல்லை
x

கொரோனாவில் இருந்து 24 மணி நேரத்தில் 53 பேர் குணமடைந்தனர்

புதுடெல்லி,

இந்தியாவில் நேற்று முன்தினம் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்தது. 46 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுவரை கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 94 ஆயிரத்து 665 ஆக உயர்ந்தது.

கொரோனாவில் இருந்து 24 மணி நேரத்தில் 53 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 44 லட்சத்து 61 ஆயிரத்து 339 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 7 குறைந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி, 1,413 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் உயிரிழப்பு இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 913 ஆக நீடிக்கிறது.


Related Tags :
Next Story