துப்பாக்கியை சுத்தம் செய்தபோது தலையில் குண்டு பாய்ந்து போலீஸ் ஏட்டு உயிரிழப்பு


துப்பாக்கியை சுத்தம் செய்தபோது தலையில் குண்டு பாய்ந்து போலீஸ் ஏட்டு உயிரிழப்பு
x

உத்தர பிரதேசத்தில் துப்பாக்கியை சுத்தம் செய்தபோது தலையில் குண்டு பாய்ந்து காவலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ,

உத்தர பிரதேசத்தை சேர்ந்த போலீஸ் ஏட்டு சந்தீப் யாதவ், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பாதுகாப்பு படைப்பிரிவில் சிறப்பு காவலராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் சந்தீப் வீட்டில் இருந்தபோது தனது கைத்துப்பாக்கியை துடைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராமல் அவருடைய கைத்துப்பாக்கி வெடித்தது.

இதனால் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


Next Story