தெலுங்கானாவில் 9-வது நாளாக ராகுல் காந்தி பாதயாத்திரை...!


தெலுங்கானாவில்  9-வது நாளாக ராகுல் காந்தி பாதயாத்திரை...!
x

ராகுல் காந்தி இன்று 57-வது நாளாக பாதயாத்திரையை மீண்டும் தொடங்கினார்.

ஐதராபாத்,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை நடத்துகிறார்.

கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி அவர் தனது யாத்திரையை தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா என அவரது பாதயாத்திரை தொடர்கிறது. இதில் அவ்வப்போது அந்தந்த பகுதிகளில் உள்ள பிரபலங்களும் சேர்ந்து கொள்கிறார்கள்.தற்போது ராகுல் காந்தி, தெலுங்கானா மாநிலத்தில் யாத்திரையை நடத்தி வருகிறார்.

ராகுல்காந்தி ஐதராபாத்தில் நேற்று தனது ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டார். இந்த பயணத்தில் ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பங்கேற்று தனது ஆதரவையும், தனது தந்தை வைகோ சார்பில் வாழ்த்துகளையும் தெரிவித்தார். காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோரும் இந்த நடைபயணத்தில் கலந்துகொண்டனர்.

இந்தநிலையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ருத்ராராமில் இருந்து ராகுல் காந்தி இன்று 57-வது நாளாக பாதயாத்திரையை மீண்டும் தொடங்கினார்.காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் 'பாரத் ஜோடோ யாத்திரை'யை மீண்டும் தொடங்கினார்.


Next Story