கல்லூரி மாணவி மற்றும் நண்பரை காட்டு மிராண்டித்தனமாக தாக்கிய கும்பல் - தட்டிக் கேட்டதால் ஆத்திரம்


கல்லூரி மாணவி மற்றும் நண்பரை காட்டு மிராண்டித்தனமாக தாக்கிய கும்பல் - தட்டிக் கேட்டதால் ஆத்திரம்
x

கோப்புப்படம் 

ஆபாசமாக கிண்டல் செய்ததை தட்டிக் கேட்ட, கல்லூரி மாணவி மற்றும் அவரது ஆண் நண்பரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோழிக்கோடு,

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில், ஆபாசமாக கிண்டல் செய்ததை தட்டிக் கேட்ட, கல்லூரி மாணவி மற்றும் அவரது ஆண் நண்பரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோட்டயம் சென்ட்ரல் சந்திப்பு பகுதியில், மாணவியும், அவரது நண்பரும் உணவகத்தில் உணவருந்தியுள்ளனர். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், மாணவியை ஆபாசமாக கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

அதனை மாணவியும், அவரது நண்பரும் தட்டிக் கேட்டதால், ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், இருவரையும் காட்டு மிராண்டித்தனமாக தாக்கியது. இதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


Next Story