10-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்


10-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்
x

10-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சண்டிகர்,

அரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்த 14 வயதான 10-ம் வகுப்பு மாணவி நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் தனது ஆண் நண்பர்கள் 2 பேருடன் அருகே உள்ள ஓட்டலுக்கு சென்றுள்ளார்.

அங்கு அந்த 2 ஆண் நண்பர்களும் மேலும் 3 பேர் என மொத்தம் 5 பேர் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

வீட்டை விட்டு வெளியேறி மகள் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர் மாணவியை இரவு முழுவதும் தீவிரமாக தேடியுள்ளனர்.

இந்த நிலையில், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மாணவியை நேற்று காலை 10 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார். மேலும், தனக்கு நடந்த கொடுமை குறித்து பாதிக்கப்பட்ட மாணவி தாயிடம் தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் இது குறித்து போலீச்8இல் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து சிறுமியின் ஆண் நண்பர்கள் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள எஞ்சிய 3 பேரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story