பா.ஜனதா வெற்றி பரிசு: பொதுமக்களுக்கு இலவச 'செல்போன் ரீசார்ஜ்'? சமூக வலைத்தளங்களில் பரவும் தகவலால் பரபரப்பு


பா.ஜனதா வெற்றி பரிசு
x

சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் போலியானது என உத்தரகாண்ட் போலீஸ் தெளிவுப்படுத்தி உள்ளது.

புதுடெல்லி,

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பரிசாக பா.ஜனதா கட்சி சார்பாக வாக்களித்த மக்களுக்கு அனைத்து நெட்வொர்க் வாடிக்கையாளர்களுக்கும் 3 மாதங்களுக்கு இலவச 'செல்போன் ரீசார்ஜ்' வழங்குவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

இதையடுத்து, அதில் உள்ள இணைப்பை பின்தொடர்ந்தால் செல்போன் எண் கேட்கப்படுவதாகவும், வாடிக்கையாளரின் செல்போன் எண்ணை உள்ளீடு செய்தால் அதன்பிறகு எந்த செயல்பாடும் இல்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குழப்பம் அடைந்து உள்ளனர். நாடு முழுவதும் இந்த தகவல் பரவி வருகிறது.

ஆனால் இந்த தகவல் போலியானது என உத்தரகாண்ட் போலீஸ் தெளிவுப்படுத்தி உள்ளது. இலவச ரீசார்ஜ் செய்வதற்கான எந்த அறிவிப்பையும் பா.ஜனதாவோ, பிரதமர் மோடியோ வழங்கவில்லை என்றும், எனவே அதுபோன்ற இணைப்புகளை திறக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளது.


Next Story