சதி திட்டம் தீட்டி கெஜ்ரிவாலை கைது செய்ய பா.ஜ.க. விருப்பம்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு


சதி திட்டம் தீட்டி கெஜ்ரிவாலை கைது செய்ய பா.ஜ.க. விருப்பம்:  ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
x

ஆம் ஆத்மி கட்சியை காலி செய்ய திட்டம் தீட்டுகின்றனரா? என அறிந்து கொள்ள இந்த தேசம் விரும்புகிறது என்று டெல்லி மந்திரி கோபால் ராய் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி மதுபான ஊழல் வழக்குகளுடன் தொடர்புடைய விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராகும்படி முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு அமலாக்க துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்த வழக்கில் மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதனால், கெஜ்ரிவாலும் அடுத்து கைது செய்யப்படலாம் என ஆம் ஆத்மி அச்சம் தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், டெல்லி சுற்றுச்சூழல் துறை மந்திரி கோபால் ராய் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, அரசியல் சதி திட்டத்தின்படி கெஜ்ரிவாலை கைது செய்ய பா.ஜ.க. விரும்புகிறது. பா.ஜ.க. தலைவர் மனோஜ் திவாரி வெளியிட்ட அறிக்கை இதனை நிரூபிக்கிறது. கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என அவர் கூறுகிறார்.

ஆம் ஆத்மி கட்சியை காலி செய்ய திட்டம் தீட்டுகின்றனரா? என அறிந்து கொள்ள இந்த தேசம் விரும்புகிறது. இதற்காக மத்திய முகமைகளை அக்கட்சி தவறாக பயன்படுத்துகிறது. திடீரென இன்று காலை ராஜ் குமார் ஆனந்தின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது. நீங்கள் (பா.ஜ.க.) என்ன செய்ய விரும்புகிறீர்கள்?

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து விட்டால், அவர்களால் மக்களவை தேர்தலில் வெற்றி பெற முடியாது என பா.ஜ.க. பயப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.


Next Story