மேற்குவங்காளத்தில் வந்தே பாரத் ரெயில் மீது 2-வது முறை கல்வீச்சு தாக்குதல்...! - அதிர்ச்சி சம்பவம்


மேற்குவங்காளத்தில் வந்தே பாரத் ரெயில் மீது 2-வது முறை கல்வீச்சு தாக்குதல்...! - அதிர்ச்சி சம்பவம்
x

மேற்குவங்காளத்தில் வந்தே பாரத் ரெயில் மீது 2-வது முறையாக கல்வீச்சு தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

கொல்கத்தா,

மேற்குவங்காளத்தின் கவுரா - நியூ ஜல்பைஹுரி இடையேயான வந்தேபாரத் ரெயில் சேவையை கடந்த டிசம்பம் 30ம் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து துவங்கி வைத்தார்.

இதன் பின்னர், கடந்த சில நாட்களுக்கு முன் வந்தேபாரத் ரெயில் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். பீகார் வழியாக ரெயில் கடந்து செல்லும்போது அதன் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கவுரா - நியூ ஜல்பைஹுரி இடையேயான வந்தேபாரத் ரெயில் மீது 2-வது முறையாக கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பலோபூர் பகுதியில் ரெயில் வந்தபோது அதன் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்லனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கல்வீச்சு தாக்குதலில் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story